முதல்வரின் செய்தி
“கற்பிப்பது என்பது நாகரீகத்திற்கான ஒரு வழிமுறையாகும்.”
1996ம் ஆண்டில் அரசு சட்டக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இது தென்மாவட்ட மக்களின் தேவைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு முன்னோடி சட்டக் கல்வி ஸ்தாபனமாகும். இது தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து முழுநேர ஐந்தாண்டு பி.எ.எல்.எல்.பி பட்டப்படிப்பு மற்றும் முழுநேர மூன்றாண்டு எல்.எல்.பி மற்றும் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பில் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் சட்டம், வணிகச் சட்டம் ஆகியவற்றை வழங்குகிறது. பல ஆண்டுகளாக இந்த கல்வி அமைப்பானது புகழ்பெற்ற சட்ட வல்லுனர்கள், மதிநுட்பமான சட்ட அறிஞர்கள், நேர்மையான நீதிபதிகள், சமூகப்பொறுப்புடைய வழக்கறிஞர்கள், அறிவார்ந்த கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் போன்றோரை சிறப்புடன் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்தாபனமானது மாணவர்களின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்து மாணவர்களை நாடுகளைக் கடந்து சிறப்புடன் விளங்கும் வகையில் தயார்படுத்துவதில் அதிக உந்துதலுடன் கூடிய திறமை மிக்க சட்ட ஆசிரியர்களைக் கொண்ட திறன்மிகு சட்டக் கல்வி முறையைக் கொண்டு விளங்குகிறது. இந்தக்கல்லூரியில் நன்கு மேம்பட்ட நூலகம், இ-மண்டலம், அற்புதமான மாதிரி நீதிமன்றம், விவாத மன்றம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைத் தவிர துடிப்புமிக்க விளையாட்டு மன்றம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
இந்தக் கல்லூரியில் ஒரு நாள் சந்தர்ப்பத்துடன் ஆரம்பித்து சாதனையுடன் முடிவடைகிறது. ஒவ்வொருநாளும் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டு அடுத்த நாளில் புதிய மைல்கல்லுடன் அளவிடப்படும்.இந்தக்கல்லூரியினைத் தேர்ந்தெடுப்பது வளர்ச்சிக்கான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.
Campus Tour
Welcome to the portal of Government Law College Tirunelveli
Wishing you all success!