75 விழுக்காடு மற்றும் அதற்கு மேலான வருகைப்பதிவு பெற்ற விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக தேர்வு எழுத தகுதியுடையவர்கள். கல்லூரி முதல்வரின் பரிந்துரையின் பேரில் 75 விழுக்காடுக்கு கீழே மற்றும் 66 விழுக்காடுக்கு மேலே வருகைப்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்துவதன் பேரில் தேர்வுக்குத் தகுதியானவர்கள். 66 விழுக்காடுக்கு குறைவாக வருகைப்பதிவு புரிந்த விண்ணப்பதாரர்கள் சட்டக்கல்வி இயக்குநரிடம் முன்அனுமதி பெற்று குறைவான வருகைப்பதிவேடை பொருட்படுத்தாமல் அடுத்த கல்வியாண்டில் ஒரு வருடம் அல்லது ஒரு செமஸ்டர் முழுப்படிப்பையும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்துவதன் பேரில் முழுமையாக மீண்டும் செய்யவேண்டும்.

பல்கலைக்கழகத் தேர்வில் ஒவ்வொரு தாளிலும் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45 விழுக்காடாகும். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுவார்கள்.:

  • 60 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் – முதல் வகுப்பு
  • 50 விழுக்காடு மற்றும் 59 விழுக்காடு வரை – இரண்டாம் வகுப்பு
  • 45 விழுக்காடு மற்றும் 49 விழுக்காடு வரை – மூன்றாம் வகுப்பு

தேர்வில் தோல்வியடைந்த பாடங்களில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.